வலிக்கும் இதயம்
நீ….
காதலை….
மறுத்த அந்த நொடியே…..
இதயம் கல்லறைக்கு…
சென்றுவிட்டது…..!
மூச்சு மட்டும்…….
பேச்சுக்காக இயங்குகிறது…..
தோற்றுப்போனாலும்…..
தேடிக்கொண்டிருக்கிறேன்…..
உன் அழைப்புக்காய்…..!
எனக்காக ஒருமுறை….
வந்துவிட்டு போ……
இல்லை வந்து என்னை…..
கொண்றுவிட்டு போ….!
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
உன்….
சிரிப்பில் கருகாமல்…..
நெருப்பில் கருகியிருக்கலாம்….
காயம் தான் இருந்திருக்கும்….
வலி காலத்தால் இறந்திருக்கும்….
@
கவிப்புயல் இனியவன்
அணுக்கவிதை
[1/11, 2:23 PM] KR.Uthayan sir: இதயத்தில் முள்….
கண்ணில் மலர்….
காதல்…. பலாப்பழம்…
அனுபவித்தால்….
இனிக்கும்….
நான் தூரத்தில்…….
இருப்பதுதான் உனக்கு….
சந்தோசம் என்றால்…..
தூரவே இருந்து விடுகிறேன்….
உன் அருகிலிருந்த ……
நினைவுகலோடு….!
@
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
கவிப்புயல் இனியவன்
தன்னம்பிக்கை கவிதை
தன்னம்பிக்கை கவிதை
தனக்கிருக்கும்…..
உறுதியான சக்தி ……
தன்னம்பிக்கை…………..!
தன்மானம் காத்திட …..
தலைசாயாத சக்தி ….
தன்னம்பிக்கை………….!
எல்லாமே இழந்தாலும் ….
எஞ்சியிருக்கும் சக்தி ….
தன்னம்பிக்கை……………!
உயிரே போனாலும் ………….
உயிர்த்தெழும் சக்தி ………..
தன்னம்பிக்கை………..!
இரக்க பார்வையை ……
இல்லாதொழிக்கும் சக்தி …..
தன்னம்பிக்கை…………!
எல்லாம் சாத்தியமே என்று ……
அறிவை நம்பும் சக்தி ……..
தன்னம்பிக்கை………….!
^^^
கவிப்புயல் இனியவன்
தன்னம்பிக்கை கவிதை
என் உயிர் ரசிகனே
என் அன்புள்ள ரசிகனுக்கு
கவிப்புயல் எழுதும் கவிதை
ஒரு
கவிஞன் தன் வலிகளை….
வரிகளாய் எழுதுகிறான் ….
ஒரு
ரசிகன் அதை ஆத்மா …
உணர்வோடு ரசிக்கிறான் …..
கவிதை அப்போதுதான் …
உயிர் பெறுகிறது …..!
#
என் உயிரை உருக்கி ….
நான் எழுதும் கவிதைகள்
என்னை ஊனமாக்கி மனதை …
இருளாக்கி இருந்தாலும் ….
கவிதைகள் உலகவலம் வருகிறது …
உலகறிய செய்த ரசிகனே …
உன்னை நான் எழுந்து நின்று ….
தலை வணங்குகிறேன் …..!
#
என்இரவுகளின் வலி……
விழித்திருந்த கண்களுக்கு தெரியும் ….
பகலின் வலி அவள் எப்போது ….
இரவில் கனவில வருவாள் ….?
ஏங்கிக்கொண்டிருக்கும்…..
இதயத்துக்கு புரியும் …..
ரசிகனே உனக்குத்தான் புரியும் ….
நான் படுகின்ற வலியின் வலி ……!
#
ஒருதலையாக காதலித்தேன் …
காதலின் இராஜாங்கம் என்னிடம் ….
காதலை சொன்னேன் ….
என் இராஜாங்கமே சிதைந்தது …..
காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ….
பரகசியத்தில் இன்னொரு துன்பம் ….
காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ….
கண்டு கொல்லாதே ரசிகனே …..!
#
என்
காதலுக்கு காதலியின் முகவரி …
இன்னும் தெரியவில்லை …
அதனால்தான் இதுவரை …..
என்னவளில் பதில் வரவில்லை …
வெறுத்தவள் மறுத்தவளாகவே….
வாழ்கிறாள் – ரசிகனே உன்னிடம் …
என் கவலையை சொல்லாமல் ….
யாரிடம் சொல்வேன் …..?
என் வாழ்வில் ரசிகனே நிஜம் ….!
#
வேதனையில்
சாதனை செய்யப்போகிறேன் ….
என்னை விட தாங்கும் இதயம் …
இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ….
வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ….
என்னையே சுற்றி சுற்றி வருகின்றன …..
அவ்வப்போது ஆறுதல் பெறுவது …..
என் ஆத்மா ரசிகனால் மட்டுமே …..!
#
என்னை உசிப்பி விட்டு ….
வேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ….
என்னை காதல் பைத்தியம் ….
வாழதெரியாதவன் ஒன்றில்லாவிட்டால் …
இன்னொன்று தெரிவுசெய்யதெரியாதவன்….
என்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ….!
ரசிகனே என் உடைகள் தான் கிழிந்து …
என்னை பைத்தியம் போல் ….
அவர்களுக்கு காட்டுகிறது ….
காதல்கிழியாமலே இருக்கிறது …..!
#
பள்ளி
பருவத்தில் மாறு வேடபோட்டியில் …..
பைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ….
காதலியால் வாழ் நாள் முழுவதும் ….
முதலிடம் அருமையான வேஷம்…..!
பிடித்தது கிடைக்கவில்லை என்றால் ….
கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் …!!!
காதல் காயம்
கண்டவுடன் காதல் கண்டத்தில் தான் முடியும் ….!!! காதல் இதயத்துக்குள் .. நான்….. ! என் இதயத்துக்குள் …. காதல்…. ! நீ… வேடிக்கையாக பார்க்கிறாய்…. ! எந்த திசை… சென்றாலும்… சொல்லெறிகிறாய்.. மையத்திசை செல்கிறேன்…. !!! காதல் கஸல் கவிதை (1802)
காதல் செவ்வாய்
❤️காதல் செவ்வாய் ❤️
…..
உன் காதலை ..
பெற்றபோது…
திரியாகவும்…
இப்போ கரியாக
இருக்கிறேன்…. !!!
விளக்காக வந்தால் ..
ஊதி அணைக்கிறாய் …
வெளிச்சமாக வந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ….!!!
என் இதயத்தில்
காதல் ஒட்டடை நீ…
எவ்வளவு தட்டினாலும்….
போகிறாயில்லை… !!!
+++
காதல் கஸல் கவிதை (1801)
“””கவிநாட்டியரசர்””
கவிப்புயல் இனிவன்
(யாழ்ப்பாணம்)
உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்
உன்னில்…..அதிகமாக அன்பு…வைத்தேன்….அவதிப்படுகிறேன்…. !அதிகமாக….நம்பிக்கை வைத்தேன்….துடிக்கிறேன்….. !என் தவறு…என்னில்அதிகமான அன்பையும்…நம்பிக்கையும்…வைக்க தவறிவிட்டேன்….!காதல்…காதலிக்க மட்டும்…அல்ல….வாழ்க்கையையும்.கற்றுத்தரும்….. !!!………
உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள் (01)…..காதல் கவிதைகள்…..கவிப்புயல் இனியவன்யாழ்ப்பாணம்
நீ ஒரு முறை
நீ …
ஒருமுறை….
கண் சிமிட்டினால்….
ஓராயிரம் கவிதை….
எழுதுகிறேன்….!
ஒரு நொடி ……
பேசாது இருந்தால்
ஆயிரம் முறை இறந்து
பிறக்கிறேன் ….!
உயிரே ……
மௌனத்தால்…..
கொல்லாதே …
உன் நினைவால்….
துடிக்கிறேன்………!
&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
இதயம் கவரும் கவிதைகள்
மிலேனியதின் 21 வயது விடலையே வருக வருக ……………….
அழிவை ஏற்படுத்தாமல் …..அன்பை பெருக்கிட..வருக வருக ….!!!
ஆக்ரோயத்தை காட்டாமல் …..ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ….!!!
இழப்புகளை ஏற்படுத்தாமல் ….இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ….!!!
ஈனச்செயல் புரியாமல் ….ஈகையை வளர்த்திட ..வருக வருக ….!!!
உலகை உலுப்பாமல்….உள்ளம் மகிழ்ந்திட …வருக வருக ….!!!
ஊனங்களை ஏற்படுத்தாமல் ….ஊர் செழிக்க ..வருக வருக …..!!!
எதிரிகளை தோற்றுவிக்காமல் ….எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக….!!!
ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் ….ஏற்றங்களை தந்திட ..வருக வருக …..!!!
ஐயத்தை தோற்றுவிக்காமல் ……ஐக்கியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ….!!!
ஒற்றர் வேலைகள் பார்க்காமல் ….ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ….!!!
ஓலமிட மக்களை வைக்காமல் …..ஓர்மத்தை ஏற்படுத்திட …வருக வருக ….!!!
ஔடத்தை பாவிக்காமல் …..ஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ….வருக ஆங்கில புத்தாண்டே வருக….!!!
^கவிப்புயல் இனியவன் கவியருவி இனியவன்